‘சோழா டோரா’ உடையில் பிரதமர் மோடி...3,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்...!

உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி, கையினால் நெய்த ‘சோழா டோரா’ என்ற பிரத்யேக ஆடையுடன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி:
தீபாவளியை முன்னிட்டு இன்று உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, டேராடூன் விமான நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உற்சாக வரவேற்பு அழைத்தார்.
‘சோழா டோரா’ உடையில் சுவாமி தரிசனம்:
அதைத்தொடர்ந்து முதலில் கேதர்நாத் கோயிலுக்கு சென்ற அவர், இமாச்சல பிரதேச பெண் கையினால் தயாரித்து வழங்கிய ‘சோழா டோரா’ என்ற பிரத்யேக உடையுடன் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்:
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, 2 ரோப் கார் திட்டங்கள் உள்பட 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
பத்ரிநாத் சென்றடையும் மோடி:
இதன்பிறகு, பத்ரிநாத் சென்றடையும் பிரதமர், அங்கு ஸ்ரீ பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதன்பின் ஆற்றங்கரையின் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
महाद्रिपार्श्वे च तटे रमन्तं सम्पूज्यमानं सततं मुनीन्द्रैः।
— Narendra Modi (@narendramodi) October 21, 2022
सुरासुरैर्यक्षमहोरगाद्यै: केदारमीशं शिवमेकमीडे।। pic.twitter.com/E8WC7oLddi