அறிமுகப்படுத்தப்பட்ட மூக்குவழி கொரோனா மருந்து....

அறிமுகப்படுத்தப்பட்ட மூக்குவழி கொரோனா மருந்து....

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

 “இன்கோவாக்”என்ற பெயரில் மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு 325 ரூபாய் என்ற விலையிலும், தனியாருக்கு 800 ரூபாய் என்ற விலையிலும் இன்கோவாக் தடுப்பூசி விநியோகம் வழங்கப்படுகிறது.  

இன்கோவாக் தடுப்பூசியை அமைச்சர்கள் மனசுக் மாண்டவியா, ஜிதேந்தர் சிங் அறிமுகம் செய்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சென்னையில் போதைபொருள் விற்றவருக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்.......