தாய்வழிச் சாதிசான்றிதழ் குறித்து அறிவித்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

தாய்வழிச் சாதிசான்றிதழ் குறித்து அறிவித்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

கேரளாவைப் போன்று, புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் :

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/entertainment/It-is-reported-that-actor-Syan-Vikram-will-make-an-entry-in-Kannada-too

முதலமைச்சர் அறிவிப்பு:

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 

  1. முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள 15 ஆயிரம் பேருக்கு, அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
  2. அதேபோன்று, 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,
  3. 90 முதல் 100 வயது வரை உள்ளோருக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
  4. அதேபோல், புதுச்சேரியில் உள்ள பழங்குடியின மக்கள் தான் வசிக்கும் பகுதிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித் தரப்படும் எனவும்,
  5. கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழப்போரின் குடும்பத்துக்கான நிவாரணம், 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  6. மேலும், கேரளாவைப் போன்று புதுச்சேரியிலும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என கூட்ட்த்தொடரில் அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.