தீபாவளி வாழ்த்து கூறிய தலைவர்கள்..!!

தீபாவளி வாழ்த்து கூறிய தலைவர்கள்..!!

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு தேசிய தலைவர்களும் அமைச்சர்களும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர்:

இந்திய குடியரசு துணை தலைவரான ஜகதீப் தங்கர் அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்! ஒளிமயமான இந்த திருநாள் நம் வாழ்வில் ஞானத்தையும், ஐஸ்வர்யத்தையும், செழுமையையும் கொண்டு வரட்டும். ஒளிரும் விளக்குகளின் ஒளி நம் நாட்டை நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்துடன் ஒளிரச் செய்யட்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர்:

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீபாவளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்தப் புனிதப் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும், இதுவே இறைவனிடம் எனது பிரார்த்தனை.” எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”தீபாவளி பண்டிகை இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், அநீதியின் மீதான வெற்றியையும் குறிக்கிறது.  மகிழ்ச்சியான இந்தியாவுக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒளி தீபங்கள், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், புன்னகையைப் பரப்புங்கள் - அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி!!!