டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா...!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா...!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், சி.பி.ஐ அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்தது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : திரைத்துறையில் யுவனின் 26 வருடம்...இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்...!

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரது ராஜினாமா கடிதத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

இவரைத்தொடர்ந்து, அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா கடிதத்தையும் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.