விதியை மீறிய விக்ரமன்... விளக்கமளிப்பாரா?!!
பிரபல ஊடக நெறியாளரும், விசிக செய்தி தொடர்பாளருமான விக்ரமன், சீட்பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளரான விக்ரமன், அவ்வப்போது செய்தி தொலைக்காட்சிகளில் தோன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை பதிவிட்டு வருவார். தமிழில் மட்டுமின்றி ஆங்கில தொலைக்காட்சிகளிலும் வெளிப்பட்டு தனது கருத்தினை பதிவிட்டு வந்தார். அரசியல் ரீதியான தனது கருத்தின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் என்பது இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம்.
இப்படி மக்களிடையே பிரபலமாக இருக்கும் ஒருவரே விதிகளை மீறி காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையானது பல்வேறு விதிமுறைகளை வகுத்து அதைசெயல்படுத்தி வரும் வேளையில் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒருவரே இவ்வாறு செய்வது மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஓட்டுக்கு கொலுசா? விளக்கமளித்த உதயநிதி!!!
View this post on Instagram