பொன்னியின் செல்வன் வரலாறு திரிக்கப்பட்ட படம்- படத்திற்கு எதிரான வழக்கு...

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் வரலாறு திரிக்கப்பட்ட படம்- படத்திற்கு எதிரான வழக்கு...

சென்னை | அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாப்பத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டி, வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்!- ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...

வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | தசரா ஷூட்டிங் நிறைவு நாளில்...கீர்த்தி சுரேஷ் பண்ண ஒரு விஷயம்...குவியும் பாராட்டுகள்!