மர்மமான முறையில் உயிரிழந்த திருநங்கை...
திருப்பத்தூர் அருகே திருநங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, சக திருநங்கைகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் | புது பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தெய்வானை தம்பதியினரின் மகனான சந்துரு என்கிற சந்திரிகா (19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்று உள்ளது.
மேலும் படிக்க | பெண்ணுறுப்பில் டார்ச் நுழைத்து மனைவியைக் கொலை செய்த கணவன்...
எனவே தெய்வானையின் சகோதரியான முனீஸ்வரி என்பவரது வீடு குருசிலாப்பட்டு பகுதியில் உள்ளது அதனைத் தொடர்ந்து பண்டிகையை காண அவரது வீட்டிற்கு சந்திரிகா சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு பகுதியில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில் இறந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் இன்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | மர்மமான முறையில் வாலிபர் உயிரிழப்பு; மனைவியே கொலை செய்தாரா?
மேலும் இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சந்திரிகாவின் உறவினர்களை திருப்பத்தூர் திருநங்கைகள் ஒன்று சூழ்ந்து முற்றுகையிட்டு சந்திரிகாவின் இறப்பிற்கு நீங்கள் தான் காரணம் உங்க வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் சரா மாறியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேக இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குரிசிலாப்பட்டு போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் படிக்க | மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவன்; நேரில் சென்று எஸ்.பி விசாரணை...