சாலைகளில் கரைபுரண்டோடிய மழைநீர்... அவதிக்குள்ளான மக்கள்...

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைகளில் மழை நீர் தேங்கியும் வெள்ளமாகவும் காட்சியளிக்கிறது.
சாலைகளில் கரைபுரண்டோடிய மழைநீர்... அவதிக்குள்ளான மக்கள்...
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மங்கனூர் கல்லாக்கோட்டை கோமாபுரம் தச்சங்குறிச்சி மட்டாங்கல் காட்டுவதால் ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் மழையாகவே இருக்கிறது.

இதேபோன்று கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பட்டி வெட்டன்விடுதி மழையூர் ரெகுநாதபுரம் வாண்டான் விடுதி குளந்திரான்பட்டு மருதன்கோன்விடுதி ராங்கியன்விடுதி பிலாவிடுதி ஆகிய பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com