யானை தாக்கி ஒருவர் பலி... சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்...

யானை தாக்கி ஒருவர் பலி... சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அருகே உள்ள பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் இன்று காலை 6:00 மணிக்கு காட்டுக் கொள்ளை பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக தென்னந்தோப்பு வழியாக சென்று கொண்டிருந்த போது தான் இரண்டு காட்டு இரண்டு காட்டு யானைகள் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் தன்னிடம் உள்ள இருந்த செல்போனை எடுத்து போட்டோ எடுத்து உள்ளார்.

அப்போது திடீரென்று காட்டு யானைகள் இரண்டு ராம்குமாரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து அங்கேயே உயிரிழந்த தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு யானைகள் இரண்டும் ஆக அங்கே சுற்றி திரிந்து வருவதால் எங்கு இருப்பது என்று கண்டுபிடிக்க முடியவில்லை யானையை போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இரண்டு காட்டு யானைகள் போச்சம்பள்ளி அருகே உள்ளஅகரம் பகுதியில் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலை பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com