மாண்டஸ் புயல் எதிரொலி...! பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்...!

மாண்டஸ் புயல் எதிரொலி...! பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்...!

சென்னையில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரம் முழுவழும் 300 க்கும் மேற்ப்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியின் பின்புறமாக உள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 நான்கு சக்கர வாகனங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் மரங்கள் மட்டுமல்லாமல் பலவீனமாக உள்ள சுற்றுச்சுவரும் சாய்ந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலிசார் ஈடுமட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : #EXCLUSIVE | ”இன்று மதியத்திற்குள் சீரான மின்சாரம்...” அமைச்சர் செந்தில் பாலாஜி