7 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் வைத்து கைது...

7 ஆண்டுகளாக கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நாகை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைதாகியுள்ளார்.
7 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் வைத்து கைது...
Published on
Updated on
1 min read

சென்னை  விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது  நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (34) என்பவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு தரங்கம்பாடி தாலுகா போலீசார் கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தர்மராஜ் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்ததால் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லுக் அவுட் நோட்டீஸ் தந்து இருப்பது தெரியவந்தது. 

7 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த  தர்மராஜை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தர்மராஜை கைது செய்து அழைத்து நாகை மாவட்ட போலீசார் சென்னை வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com