‘பிட்டு’ படம் பார்த்ததாக பள்ளி ஆசிரியரிடம் துட்டு பறித்த ‘போலி’ போலீசார்...

திருச்சியில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியரை இளைஞர் ஒருவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

‘பிட்டு’ படம் பார்த்ததாக பள்ளி ஆசிரியரிடம் துட்டு பறித்த ‘போலி’ போலீசார்...

திருச்சியில் இயங்கி வந்த தனியார் பள்ளி ஒன்றில் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மனைவி, பிள்ளைகள் என அன்பான குடும்பத்துடன் வசித்து வந்த ஆசிரியர் அவ்வப்போது ஆபாச படங்களைப் பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அளவுக்கு மீறி, அதிகப்படியாக ஆபாச வீடியோக்களை பார்த்து வந்த ஆசிரியரை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் வெகுநாட்களாக நோட்டமிட்டுள்ளார். ஒருநாள் அசோக்கிடம் இருந்து ஆசிரியருக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. 

மேலும் படிக்க | சதுரங்க வேட்டை பாணியில் அழகிகளை வைத்து பண மோசடி...

மறுமுனையில் பேசியவர், தன்னை போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி செல்போனில் அவர் அடிக்கடி ஆபாச படம் பார்ப்பதை சுட்டிக்காட்டி, சட்டவிரோதமான வீடியோக்களைத் தேர்ந்தெடுத்து பார்த்ததாகக் கூறி, சிறையில் அடைக்கவா? என மிரட்டியுள்ளார் அசோக்.

பயந்து போன ஆசிரியர், தன்னை விட்டு விடுமாறு கெஞ்சிய நிலையில், பணம் கொடுத்தால் அவர் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என லாவகமாக பேரம் பேசியுள்ளார். பேசுவது போலி போலீஸ் என அறியாத ஆசிரியர், பணத்தை விட மானம் தான் முக்கியம் என அசோக்கின் வலையில் சிக்கியுள்ளார்.

மேலும் படிக்க | ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 75 லட்சம் ரூபாய்..! பறிமுதல் செய்த போலீசார்...!

எப்படியோ அங்கும் இங்கும் திரட்டி அசோக்கிடம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்த பின், அசோக்கின் கூட்டாளிகள் சிலரும் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு ஆபாச படம் பார்த்ததை காரணம் கூறி பணம் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் மிரண்டு போன பள்ளி ஆசிரியர், திருச்சி சைபர் கிரைம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்தார். அதன்படி வழக்கு தொடுத்த போலீசார், போலி போலீசாக சுற்றி வந்த அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆபாசப் படங்களுக்கு அடிமையானவர்கள் சிலரை நோட்டமிடும் கும்பல் இப்படியான நூதன திருட்டில் இறங்கியுள்ளது பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியது.

மேலும் படிக்க | பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை...! போலீசார் தீவிர விசாரணை...!