பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை...! போலீசார் தீவிர விசாரணை...!

பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை...! போலீசார் தீவிர விசாரணை...!

சென்னை அமைந்தகரை கலெக்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகூர் கனி(33). இவர் அயனாவரம் யுனைடெட் இந்தியா நகர் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை ஏழு மணி அளவில் வழக்கம் போல் பிரியாணி கடைக்கு வந்த நாகூர் கனி, தனது ஊழியர்களிடம் பேசிவிட்டு கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் நாகூர் கனியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பாக்கம் துணை ஆணையர், அயனாவரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த நாகூர் கனிக்கு கத்திஜா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். உயிரிழந்தவர் மீது அமைந்தகரை அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிறு சிறு வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : நடந்தது நகர சபையா? அல்லது திமுகவின் நாடக சபையா? மநீம அறிக்கை!