அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு...!!!

அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு...!!!

சென்னை ஓட்டெரியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஓட்டேரி KH சாலை பகுதியில் உள்ள  பூட்டி வைக்கப்பட்டிருந்த சமூக நலகூடத்தில் மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது.  இந்நிலையில் அப்பகுதியில் நேற்று மாலை பொதுமக்களில் ஒருவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.  அப்போது அழுகிய நிலையில் சிதிலமடைந்த ஒரு நபரது தலை மற்றும் உடல் தனி தனியாக தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது. 

அதனைக் கண்ட அந்த நபர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.   தகவலின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசரின் முதற்கட்ட விசாரணையில் சுமார் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து பல நாள் ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இறந்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், இறந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா?  அல்லது யாரேனும் கொலை செய்து சிதிலமடைந்த சமூக நல கூட்டத்தில் தூக்கிட்டு சென்றனரா?  என்ற கோணங்களில் தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:   பாஜகவை ஓரம் கட்ட நினைக்கும் எடப்பாடி...!!!