தகாத உறவு காரணமாக பேராசிரியரை தாக்கிய இருவர் கைது...

தஞ்சையில் பேராசிரியரை தாக்கிய வழக்கில், இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகாத உறவு காரணமாக பேராசிரியரை தாக்கிய இருவர் கைது...

தஞ்சை | மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவருடைய மனைவி வளர்மதி.கடந்த 14-ந்தேதி பாலசுப்பிரமணியன் தனது காரில் வழக்கம் போல் பணிக்கு சென்றார். மாலை அவர் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15-ந் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.

மேலும் படிக்க | துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது...

தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17-ந் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தனது தாயுடன் கொண்ட தவறான உறவை விட்டு விடுமாறு பேராசிரியர் பாலசுப்ரமணியனிடம் சந்தோஷ் அன்பாகவும், அதட்டியும் எச்சரித்துள்ளார். ருசிக்கண்ட பூனையாய் பாலசுப்ரமணியனும் அந்த பெண் பேராசிரியையும் தங்கள் உறவை விட்டதாய் இல்லை.

மேலும் படிக்க | சொத்துக்காக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை...

இதனால் அவமானமும், ஆத்திரமும் அடைந்த  சந்தோஷ் தனது நண்பர் கார்த்தி (24) என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷ் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மொழியில் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய மூன்று பாடங்களில் எம் ஏ பட்டம் பெற்றுள்ளார். தமிழ் இலக்கணத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் மேலும் இந்திய குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருது உட்பட நான்கு விருதுகள் பெற்றுள்ளார் இவ்வளவ மெத்த படித்த பேராசிரியர் சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு சின்னா பின்னமாகி சிதைந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

மேலும் படிக்க | பேருந்து கவிழ்ந்து விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...