பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த தக்க சன்மானம்...

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த பட்டதாரி ஆசிரியருக்கு தர்ம அடி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த தக்க சன்மானம்...

திருவண்ணாமலைவந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 225-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில், அறிவியல் பாடப் பிரிவில், பட்டதாரி ஆசிரியராக இருந்து வந்த பரணி என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இவரது போனில் இருந்து, மாணவிகளுக்கு இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வருவதாகவும் மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | விமானத்தில் வந்து காதலியை குத்திக் கொன்ற காதலன்...

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பரணி என்பவருக்கு தர்மடி கொடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 

இதையடுத்து தகவல் அறிந்த கீழ்க்கொடுங்கலூர் காவல் நிலைய போலீசார் பள்ளிக்குச் சென்று பாலியல் தொந்தரவு செய்த பட்டதாரி ஆசிரியர் பரணியை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது...