ஒரே அடியில் மயக்கமடைந்த ரமேஷ்...விடாத மர்மநபர்...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ஒரே அடியில் மயக்கமடைந்த ரமேஷ்...விடாத மர்மநபர்...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சென்னை தேனாம்பேட்டையில் சாலையோரம் நின்றிருந்தவரை ஒரே அடியில் மயக்கமடையச் செய்தவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுப்போதையில் இருந்த நபரிடம் வாக்குவாதம்:

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்றிரவு மதுப்போதையில் பெரியார் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயச்சந்திரன் என்ற நபர், ரமேஷிடம் யார் நீ? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றவே, ரமேஷை ஜெயச்சந்திரன் பலமாக அடித்துள்ளார். 

இதையும் படிக்க: தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும்...ஆளுநர் மாநில தலைவராக செயல்பட வேண்டாம்...டி.ஆர்.பாலு பதிலடி!

ஒரே அடியில் மயக்கமடைந்த ரமேஷ்:

இதனால் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இருந்தாலும் விடாத ஜெயச்சந்திரன், தொடர்ந்து ரமேஷை எட்டி உதைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு  அங்கிருந்து தப்பியுள்ளார்.

தேடுதல் வேட்டையில் போலீசார்:

இந்த தாக்குதலில் காயமடைந்த ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷை தாக்கிய நபர் ஜெயச்சந்திரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான ஜெயச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

இருப்பினும், குடிபோதையில் இருந்த ரமேஷை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.