இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி...

தாம்பரம் அருகே மருத்துவமனையில் இருந்த வாலிபரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி...

சென்னை : தாம்பரம் அடுத்த சேலையூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (37), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை பார்ப்பதற்காக கடந்த 28 ம்தேதி  முருகன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையின் ரிசப்ஷன் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்துள்ளார்.

மேலும் படிக்க | அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு...

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலில் இருவர் மருத்துவமனை உள்ளே புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு - அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது..!

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 1 பெண் உட்பட, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குற்றவாளிகள் கைது...