மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணால் பரபரப்பு...

அம்பத்தூரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து கொலையாக தற்கொலையா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணால் பரபரப்பு...

சென்னை : அம்பத்தூர் கள்ளிகுப்பம் கங்கை நகர் பகுதி சேர்ந்தவர் ராஜா இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் இவருக்கு பவித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து வாழ்ந்து வந்தனர். பவித்ராவிற்கும் இது இரண்டாவது திருமணம்.

இந்த நிலையில் பவித்ராவின் செல்போனை அழைத்த அவரது தந்தை அவர் செல்போனை எடுக்காத காரணத்தினால் சந்தேகம் அடைந்து அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு பவித்ரா சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | தற்கொலை செய்த விசாரணை கைதியின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது...

உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அவர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த பவித்ரா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவரது கணவரான ராஜா தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் சந்தேகம் அவர் மீது திரும்பி உள்ளது. ராஜா பிடிப்படும் பட்சத்தில் அல்லது பிரேத பரிசோதனை முடிவில் தான் பவித்ரா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பிரிந்து போன மனைவி... மச்சானுக்கு அரிவாள் வெட்டு..