தந்தை கண் முன்னே மகள் கடத்தல்...! வெளியான சிசிடிவியால் பரபரப்பு..!

தந்தை கண் முன்னே மகள் கடத்தல்...! வெளியான சிசிடிவியால் பரபரப்பு..!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம்  முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தன்னுடைய மகள் ஷாலினியுடன் (18) இன்று காலை அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். பின்னர் இருவரும் வெளியே வந்தபோது, அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் ஷாலினியை காரில் கடத்தி சென்றனர். தடுத்து நிறுத்த முயன்ற சந்திரய்யா மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி சந்திரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆராய்ந்தபோது, இளம்பெண் கடத்தல் தொடர்பான காட்சிகளை கைப்பற்றி அடிப்படையில்ஷாலினியை கடத்தி சென்ற நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க : நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்...! ஆதரவாக செயல்பட்ட பேராசிரியை..!