பைக்கில் வழிமறித்து 437 கிராம் தங்கம், ரூ.6 லட்சம் கொள்ளை...

ந்தமல்லி அருகே தங்க நகை வியாபாரியை பைக்கிலிருந்து கீழே தள்ளி 437 கிராம் தங்கம் மற்றும் 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பைக்கில் வழிமறித்து 437 கிராம் தங்கம், ரூ.6 லட்சம் கொள்ளை...

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் ஜெயின் என்பவர் சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வருகிறார். இவர் தங்க நகை வியாபாரம் செய்து வரும் இவர், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை, அவர்கள் கேட்கும் டிசைனுக்கு ஏற்ப கோயமுத்தூரில் உள்ள ஆசாரியிடம் தயார் செய்து காஞ்சிபுரம் பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.

மேலும் படிக்க | பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை...

இந்தநிலையில் நேற்று காலை காஞ்சிபுரம் சென்று புதிய டிசைன்களில் செய்யப்பட்ட தங்க நகை 420 கிராம் மற்றும் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த இருவர் ராஜேஷ்குமார் ஜெயின் ஓட்டி வந்த வண்டியின் மீது மோதி அவரை கீழே தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | 2 கோயில்களில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் - போலீசார் விசாரணை!

பின்னர் 420 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த பையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஷ் குமார் ஜெயின் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் கொள்ளை நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.  

பரபரப்பு மிகுந்த பூந்தமல்லி சாலையில் இரவு 8 மணி அளவில் நகை வியாபாரியை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | யானை தாக்கி ஒருவர் பலி... சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்...