இளமையாக இருக்க நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நரபலி கொடுக்கப்பட்டதோடு, நரமாமிசமும் சாப்பிடப்பட்டிருக்கும் கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

இளமையாக இருக்க  நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...

கேரளா: பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலந்தூரைச் சேர்ந்தவர்கள் பகவல்சிங் மற்றும் லைலா. அந்த பகுதியில் மசாஜ் சென்டர் மற்றும் மூலிகை மருத்துவம் சார்ந்த தொழிலை பார்த்து வந்த பகவல் சிங்குக்கு சில காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. 

முகநூல் பழக்கம், முடிவு வரைக்கும்...

அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பதற்கு வழி என்ன என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஃபேஸ்புக் மூலமாக முகமது ஷாபி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த முகமது ஷாபி தன்னை சினிமா, ஜோதிடம் இவற்றுக்கான ஒரு புரோக்கர் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து ஷிகாப் என்பவரின் செல்ஃபோன் நம்பரைக் கொடுத்து இவர் பெரிய மந்திரவாதி என பேசியிருக்கிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்ன என்றால் முகமது ஷாபியும், ஷிகாப் என்ற இருவரும் ஒரே ஆசாமி தான். 

மேலும் படிக்க | கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...

சினிமா மோகம் காட்டி வலைவீச்சு...

இதற்கிடையில் அந்த போலி மந்திரவாதி, ரோஸ்லின் என்ற பெண்ணுடன் ரகசியமாக பேசி வந்ததோடு, “சினிமாவில் நடிகையாக்குகிறேன்” எனவும் வாக்களித்திருக்கிறார். பகவல்சிங் தொழிலில் லாபம் அடைவதற்கு என்ன செய்யலாம் என கேட்டபோது, பெண் ஒருவரை ‘நரபலி’ கொடுத்தால் சரியாகி விடும் என சொல்லியிருக்கிறான் அந்த கல்நெஞ்ச கயவன். 

Kerala human sacrifice incident: Main accused a 'sexual pervert', raped 75-yr-old woman in 2020

முதலில் அட்ஜஸ்ட்மெண்ட்...

நரபலி என்றவுடன் ஆரம்பத்தில் திடுக்கிட்டுப் போனாலும், பேராசை காரணமாக இந்த கொடூரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் அந்த மசாஜ் சென்டர் மனநோயாளிகள். சினிமா கனவுகளுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ரோஸ்லினை கடந்த மார்ச் மாதம் எர்ணாகுளத்திற்கு அழைத்துள்ளான் போலி மந்திரவாதி ஷிகாப் எனும் முகமது ஷாபி.

சினிமா என்றால் முதலில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி விட்டு ரோஸ்லினுடன் உறவு கொண்ட மந்திரவாதி, ரோஸ்லின் உடையின்றி நிர்வாணமாக கிடந்த நிலையில், அறையின் உள்ளே மசாஜ் சென்டர் தம்பதியான பகவல் சிங் - லைலாவை அழைத்திருக்கிறான். 

மேலும் படிக்க | #BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....

வேடிக்கை பார்த்த கொடூரக்காரன்...

உள்ளே வந்த கணவன் மனைவி இருவரையும் துணியை கழற்றச் செய்து இப்போது நீங்கள் மூன்று பேரும் உறவு கொள்ள வேண்டும் என அந்த போலி மந்திரவாதி கூறிய நிலையில், உறவு முடிந்ததும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஸ்லின் கழுத்தை வெட்டியுள்ளான் போலி மந்திரவாதி ஷிகாப்.

இதற்கு ரத்த சாட்சியே அந்த மசாஜ் சென்டர் தம்பதியினர் தான்.

Kerala human sacrifice: Mohammed Shafi, CPM worker Bhagwant Singh, and his  wife murder 2 women to

ஒன்று பத்தாதே...!

ரோஸ்லினை நரபலி கொடுத்து பல மாதங்களாகியும் பகவல் சிங்குக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என அந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் கேட்டதும், ஒரு பலியோடு விடக்கூடாது, இன்னும் ஒருவரை நரபலி கொடுத்தால் பணமும் கிடைக்கும், என்றும் இளமையாக இருக்கலாம் எனக்கூறி மீண்டும் பணத்தைக் கறந்துள்ளான் போலி மந்திரவாதி ஷிகாப்.  

மேலும் படிக்க | கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்...

அடுத்த டார்கெட் பத்மா...

இந்தமுறை ஷிகாபின் டார்கெட், எர்ணாகுளத்தில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மா என்ற பெண் மீது விழுந்தது. அவருக்கும் பணத்தாசை காட்டி தனது திட்டங்களுக்கு அடிபணிய வைத்துள்ளான் ஷிகாப். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதியன்று பகவல் சிங் - லைலா வீட்டுக்கு பத்மாவை ஷிகாப் கூட்டிச் சென்றுள்ளான். ரோஸ்லினுக்கு நடந்தது போலவே பத்மாவுக்கும் நடந்துள்ளது. ஆனால், இந்தமுறை அதனை வீடியோவாக ஷிகாப் பதிவு செய்திருக்கிறான். 

மேலும் படிக்க | மசாஜ் செண்டர் ஊழியர்களுக்கு பலத்த ‘மசாஜ்’ கொடுத்த சம்பவம்...

56 துண்டுகள்... நரமாமிசம்...

இதையடுத்து ரோஸ்லினை போலவே, பத்மாவையும் 56 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து, தீ மூட்டிய ஷிகாப். பத்மாவின் வெட்டப்பட்ட கையை வாட்டி அதனை மசாஜ் சென்டர் உரிமையாயளர்களுக்கு சாப்பிட கொடுத்திருக்கிறான்.

பணத்தாசையின் பிடியில் இருந்த பகவல்சிங் மற்றும் லைலா தம்பதி அந்த நரமாமிசத்தை சாப்பிட்டு முடித்தவுடன் பத்மாவின் எஞ்சிய உடல் பாகங்களை வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். 

இந்த நிலையில் பத்மாவை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க | சும்மா கிடந்த வாகனங்களையும் அருகிலிருந்த மக்களையும் வெட்டிய போதை ஆசாமிகள்...

கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...

பிடிப்பட்ட குற்றவாளிகள்...

இதன் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார், பத்மாவின் செல்போன் எண்ணை ஆராய்ந்து, முதலில் போலி மந்திரவாதி ஷிகாபை தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் ஷிகாபை போலீசார் தீவிர விசாரணை செய்ததை அடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்களுக்காக நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளான். நரமாமிசம் தின்ற பகவல்சிங் - லைலா இருவரும் கைது செய்யப்பட்டனர்.  

அவரது வீட்டின் அருகே புதைக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா இருவரது உடலையும் தோண்டி எடுத்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அவற்றை அனுப்பினர். தற்போது பகவல்சிங் - லைலா இருவரும் 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

வக்கிரனுக்கும் பேராசைக்கும் இடையில் பறிபோன 2 பெண்களின் உயிர்....

தொழில் விருத்தி அடைவதற்கு நரபலிதான் சரியான வழி என கணவன் மனைவியை நம்பச் செய்ததோடு, சினிமா ஆசை காட்டி இரண்டு பெண்களையும் ஏமாற்றி கொலை செய்திருக்கிறான் முகமது ஷாபி.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

பணத்தாசையாலும், சினிமா ஆசையாலும் இந்த காலத்திலும் இப்படியெல்லாம் கொடூரம் நிகழ்ந்ததைக் கண்டு மலையாள தேசம் மட்டுமின்றி, உலகமே அதிர்ந்து போயிருக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

In Kerala 'Human Sacrifice', Couple Killed 2 Women, Buried Chopped Bodies