சும்மா கிடந்த வாகனங்களையும் அருகிலிருந்த மக்களையும் வெட்டிய போதை ஆசாமிகள்...

மது போதையில் இளைஞர் கூட்டம், தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அங்கிருந்த மக்களையும் வெட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சும்மா கிடந்த வாகனங்களையும் அருகிலிருந்த மக்களையும் வெட்டிய போதை ஆசாமிகள்...

சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள ஆபிரகாம் தெருவில் இரவு 8 மணியளவில் 30க்கும் மேற்பட்ட இளைஞர் கும்பல் போதையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. 

இதை கண்ட பெண்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஒடினார்.  பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவை சார்ந்த நவீன்(28) என்பவரை சராமாரியாக தலை, முதுகு, இடுப்பு பகுதியில் வெட்டியாது. இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போது ஆயுதங்களை ஏந்தி  கும்பல்  தப்பி சென்றது. 

மேலும் படிக்க | மதுபானமா...? கெமிக்கலா...? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு...!

அந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்களை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி விட்டு சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் மடிப்பாக்கம் போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Alandur foot over-bridge near Chennai Metro Rail station to open by  December end - The Hindu

இந்த பிரச்சனை தொடர்பாக விசாரித்த போது கஞ்சா அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆபிரகாம் நகருக்கு ரவுடி கும்பல் வந்து ரகளை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் வந்த ரவுடி கும்பல் யார் எங்கிருந்து வந்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | வ.உ.சி. மைதானத்தின் கழிவறையில் ஊக்க மருந்துகள்...விளையாட்டு வீரர்கள் உபயோகித்தார்களா?

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரங்களில் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சென்னை: ரயிலில் ஏற முயன்ற முதியவர்.. தள்ளி விட்டு காத்த காவலர்கள்!

Alandur foot overbridge set to open next month | Chennai News - Times of  India