‘மீசை வச்ச குழந்தை’ன்னு சொன்னதுக்கு குழந்தையாவே மாத்திட்டீங்களேப்பா...

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, அவரது மதுரை ரசிகர்கள் ஒட்டும் போஸ்அர்களால் தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது.

‘மீசை வச்ச குழந்தை’ன்னு சொன்னதுக்கு குழந்தையாவே மாத்திட்டீங்களேப்பா...

ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அந்த ரசிகர்கள் ரஜினியின் படங்களை மட்டுமின்றி, அவரையே ஒரு கடவுளாக பாவிக்கும் அளவிற்கான ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், இன்று தனது 72 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிக்கு, ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி, கேக் வெட்டி, வெடிகள் வைத்தெல்லாம் கொண்டாடி வரும் நிலையில், ஒரு சில போஸ்அர்கள் மக்களின் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதிலும், மதுரையில் உள்ள ரஜினி காந்த் ரசிகர் மன்றம் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர் டிசைன்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன என்று சொல்வதில் எந்த தவறுமில்லை.

மேலும் படிக்க | வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...

ஏன் என்றால், ஒரு போஸ்டரில், அவருக்கு காவி உடை உடுத்தி கொண்டை மற்றும் ருத்ராட்ச கொட்டை என மொத்தம் வேறு ஒரு கோலத்தில் அவரை எடிட் செய்து போஸ்டர் ஒட்டி வைத்திருந்தனர். இந்நிலையில், அவரை ஒரு குழந்தை வடிவத்திலேயே மிசையோடு எடிட் செய்து “குழந்தை மனம் கொண்டவரே” என தலைப்பும் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இதனால் நெட்டிசன்கள் 70 வயது ஆனாலும் அவரது அழகும் ஸ்டைலும் குறையவில்லை என்பது உண்மை தான், அதற்காக இப்படியெல்லாமா எடிட் செய்வது என கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் ரஜினி-யின் 72-வது பிறந்தநாளை தீப்பறக்க கொண்டாடும் ரசிகர்கள்...