தமிழ்நாடு அரசுக்கு போட்டியானதா பிரதமரின் காசி தமிழ் சங்கமம்... அமைச்சர் சேகர் பாபு கூறுவதென்ன?!!

தமிழ்நாடு அரசுக்கு போட்டியானதா பிரதமரின் காசி தமிழ் சங்கமம்... அமைச்சர் சேகர் பாபு கூறுவதென்ன?!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காசி ஆன்மீக சுற்று பயணத்தின் முதல் அணியில் காசி தரிசனம் செய்து முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய பயணிகளை வரவேற்றுள்ளார் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு.

ஒதுக்கப்பட்ட நிதி:

இந்து சமய அறநிலைத்துறையின் கோரிக்கையில் ஏழாவது கோரிக்கையாக ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்கள் எனக் கூறிய அமைச்சர் சேகர் பாபு  சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் செல்ல புனித யாத்திரை அறிவித்திருந்ததாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.

பயணத் திட்டம்:

தற்போது முதற்கட்டமாக 66 நபர்கள் காசிக்கு சென்று திரும்பி உள்ள நிலையில் அவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த ஆண்டில் மொத்தம் 200 நபர்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  முதல் கட்ட பயணம் முடிவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பயணமாக மார்ச் 1 மற்றும் மூன்றாம் கட்டமாக எட்டாம் தேதி பக்தர்களை காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். 

அடுத்த ஆண்டு:

மேலும் இந்த ஆண்டு ஆன்மீக பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்து செல்ல முடியாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆன்மீகப் பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் அதே போல் அடுத்த கட்டமாக 2023 மற்றும் 2024 ஆண்டு தொடங்குகின்ற போது ஏற்கனவே இதற்காக பயணத்திற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் உரிமை அளிக்கப்பட்டு அவர்களை அழைத்து செல்வதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்ய இருக்கிறோம் என்றும் இந்த ஆன்மீகப் பயணம் மேலும் தொடரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

காசி  தமிழ் சங்கத்திற்கு போட்டியா?:

காசி  தமிழ் சங்கத்திற்கு போட்டியாக திமுக இந்த ஆன்மீகப் பயணத்தை தொடங்கியதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, யாருக்காகவும் இது போட்டி அல்ல எனவும் கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் இதை அறிவித்து விட்டோம் எனவும் தெரிவித்த அமைச்சர் இப்போதுதான் இந்த காசி சங்கமம் உருவானது எனவும்  தமிழக அரசுக்கு போட்டியாக தான் இந்த காசி தமிழ் சங்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதையும் படிக்க:  சென்னை விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம்... விமான ஊழியர் கைது!!!