யானை தாக்குதலில் உயிரிழந்த ரவீந்திர போடோ!!! யானைத் தாக்குதலை நிறுத்தும் வழிதான் என்ன?!!

யானை தாக்குதலில் உயிரிழந்த ரவீந்திர போடோ!!! யானைத் தாக்குதலை நிறுத்தும் வழிதான் என்ன?!!

வனப்பகுதியில் இருந்து காட்டுயானை கூட்டம் உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் அவைகளை  விரட்ட முயன்றுள்ளனர்.  ஆனால் யானைகள் ஒன்றிணைந்து அவர்களைத் தாக்கியுள்ளன.

யானைகள் தாக்குதல்:

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.   இதற்கிடையில், பக்சா மாவட்டத்தில் காட்டு யானைகள் கூட்டத்தின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தகவலின்படி, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் ஒன்று உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளன.  மக்கள் அவர்களை விரட்ட முயன்றனர்.  ஆனால் யானைகள் அவர்களைத் தாக்கியுள்ளன.

சிகிச்சை பலனின்றி:

யானை தாக்கியதில் ரவீந்திர போடோ என்பவர் படுகாயம் அடைந்திருந்தார்.   அவர் காயமடைந்த மற்ற ஐந்து பேருடன் ரங்கியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவீந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனபதி போடோ, அனில் டைமரி, பரேஷ் போடோ, தெங்கோனா முஷாரி மற்றும் சுல்லேந்திர போடோ ஆகிய ஐந்து பேரும் காயமடைந்துள்ளனர்.  இவர்களின் டைமாரியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை:

இதற்கு முன்னரும் சிலர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக அசாம் மக்கள் கூறியுள்ளனர்.   மேலும் காட்டு யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்வதாகவும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.  அசாமில் யானை-மனித மோதல் அதிகரித்து வருவதாகவும் வனப் பகுதிகள் பாதுகாக்கப்படாவிட்டால் இதுபோன்ற மோதல்கள் மேலும் அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  எச்சரித்துள்ளனர்.

இதையும் படிக்க: சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீது நம்பிக்கை கொண்டு வந்த ஆஷா!!!யார் அந்த ஆஷா!!!