சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத்தலைவர்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத்தலைவர்!

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை நியமித்து, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். 

இதையும் படிக்க : காலநிலை மாற்றத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு சாதனை...!

இந்நிலையில், கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகிய ஐந்து பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. 

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர், கூடுதல் நீதிபதிகள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, அவர்கள் ஐந்து பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைக்கவுள்ளார்.