ஈரோடு இடைத்தேர்தல் : பிற்பகல் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

ஈரோடு இடைத்தேர்தல் : பிற்பகல் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59 புள்ளி 28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேசமயம், வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குபதிவில், காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 10 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 27 புள்ளி 89 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59 புள்ளி 28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் ஆண்கள் 65,350 பேர், பெண்கள் 69,400 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 1,34,758 பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.