தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!

தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை புறப்பட்ட தேஜஸ் ரயில், தாம்பரத்தில் நின்று சென்றதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரையை அடையும் தேஜஸ் ரயில், அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னையை வந்தடையும். ஆனால், இந்த ரயில் தாம்பரத்தில் நிற்காமல் செல்வதால் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சோதனை அடிப்படையில் தாம்பரத்தில் ரயில் நின்று செல்லும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்ட மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. தாம்பரம் வந்த தேஜஸ் ரெயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com