தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!

தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை புறப்பட்ட தேஜஸ் ரயில், தாம்பரத்தில் நின்று சென்றதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரையை அடையும் தேஜஸ் ரயில், அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னையை வந்தடையும். ஆனால், இந்த ரயில் தாம்பரத்தில் நிற்காமல் செல்வதால் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையும் படிக்க : விதிகளை மீறி நம்பர் பிளேட்...வாகனங்களுக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்!

பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சோதனை அடிப்படையில் தாம்பரத்தில் ரயில் நின்று செல்லும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்ட மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. தாம்பரம் வந்த தேஜஸ் ரெயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.