வன்முறையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்.....மரணமும் சேர்ந்து பரிசாக!!!

வன்முறையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்.....மரணமும் சேர்ந்து பரிசாக!!!

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில் வன்முறை மற்றும் வறுமை அதிகரித்துள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஹைதி நாட்டில் வன்முறை மற்றும் வறுமை அதிகரித்துள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான முறையில் கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்தவகையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக 396 அகதிகளுடன் சென்ற படகை அமெரிக்க கடலோர காவல்படையினர் மடக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் போராட்டத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக தலைநகரான போர்ட்- ஓ - பிரின்ஸில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”கருணாநிதி 4ம் நம்பரில் தலை வைத்தார் ஆனால் ரெயிலோ 5ம் நம்பர் தண்டவாளத்தில் வந்தது” முன்னாள் அமைச்சர் கிண்டல் பேச்சு!!!