இரவு ரோந்தில் உள்ள காவலர்கள்...! திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்...!

இரவு ரோந்தில் உள்ள காவலர்கள்...! திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்...!

சென்னையில் இரவுப்பணியில் உள்ள ரோந்துக்காவலர்கள் குறித்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களில் உள்ள 8 காவல் நிலையங்கள் மற்றும் இரவு ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் பணியாற்றுவதை கண்காணிக்கும் வகையில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனது சைக்கிளில் சாதாரண உடையில் பயணித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சுமார் 9 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளை சைக்கிளில் பயணம் செய்து இரவு ரோந்து வாகன காவலர்களிடம் கலந்துரையாடி பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும், குறிப்பேடுகளை ஆய்வு செய்த அவர், கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்தும் கேட்டறிந்தார். காவல் துறையினரை விழிப்புடன் பணியாற்றச் செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் எனவும் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்...” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்