மக்களே உஷார்...தமிழகத்தில் வருகிற 3 முதல் 5 வரை...மழைக்கு வாய்ப்பு...!

மக்களே உஷார்...தமிழகத்தில் வருகிற 3 முதல் 5 வரை...மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாளை வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும், 3 முதல் 5ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்க: ஓராண்டு நீட்டிப்பு...இலவச உணவு தானிய திட்டம்...நாளை முதல் அமல்!

அதேசமயம், சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.