பொங்கல் பரிசு தொகுப்பில் ”தேங்காய்” வழங்கக்கோரி...பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...!

பொங்கல் பரிசு தொகுப்பில் ”தேங்காய்” வழங்கக்கோரி...பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...!

நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் தேங்காய் மற்றும் தென்னங்கன்றுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேங்காய் வழங்க வலியுறுத்தல்:

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக 1000 ரூபாய் பணம், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் ரேஷன் கடை மூலமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று தமிழக முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இனி சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதல் பேருந்து... எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா?

போராட்டத்தில் குதித்த பாஜக:

அந்த வகையில்  நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர், பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்க வலியுறுத்தினர். பாஜக மாவட்ட பிரிவு தலைவர் சின்ன பிள்ளை என்கிற கிருஷ்ண மூர்த்தி தலைமையில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஈடுபட்டனர்.

கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்:

இதில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னங்கன்றுகள் மற்றும் தேங்காய்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்

தொடர்ந்து, ஏற்கனவே கரும்பு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதன் பயனாக தமிழக முதலமைச்சர் கரும்பு வழங்க உத்தரவிட்டார். அதேபோன்று, தேங்காயும் வழங்க வேண்டும், இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.