வீட்டு மனை பட்டாவை முறையான தரவுகளுடன் வழங்குக..திருநங்கைள் மனு!

வீட்டு மனை பட்டாவை முறையான தரவுகளுடன் வழங்குக..திருநங்கைள் மனு!
Published on
Updated on
1 min read

திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டும்,  அதிகாரிகள் அளந்து தராமல் அழக்களிப்பதால், அளந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் உள்ள திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என சுமார் 15 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.

இந்நிலையில், அவர்களின் நீண்ட கால கோரிக்கைக்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சுமார் 59 திருநங்கைகளுக்கு குனிச்சு பகுதியில் வீட்டுமனை பட்டா மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

ஆனால், வீட்டுமனை பட்ட கிடைத்தும், இதுவரை அதிகாரிகளால் அளந்து தரப்படவில்லை, என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தால் படித்த திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com