தந்தை கண் முன்பே அழிந்த குடும்பம் ,..7 மணி நேர போராட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி., இஸ்ரேல் தாக்குதலில் நடந்த கொடூரம்.!

தந்தை கண் முன்பே அழிந்த குடும்பம் ,..7 மணி நேர போராட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி., இஸ்ரேல் தாக்குதலில் நடந்த கொடூரம்.!

மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நடக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பும் மாறி மாறி தாக்குதல் தொடுத்துவருவதால் இருதரப்பிலும் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் சிறுமி உட்பட இருவர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தாக்குதலில் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாலஸ்தீனனத்தில் இருக்கும் காசா நகர் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

அப்படி இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் சுஷி எஸ்குண்டனா என்ற 6 வயது சிறுமி சிக்கிக் கொண்டார். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குபின் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது தாய் மற்றும் 4 உடன் பிறந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த போது அந்த சிறுமியின் தந்தை வீட்டுக்கு வெளியில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அவரது தந்தை குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்க வீட்டின் பாதுகாப்பான இடத்தில சென்று அவரது குடும்பத்தினரை பதுங்கியிருக்க கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி இஸ்ரேல் தாக்குதலில் அவரது வீடு இடிந்து அவரின் கண் முன்பே அவரது குடும்பத்தினர் இறந்துள்ளனர். அவரது ஒரு மகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி அந்த சிறுமி மீட்கப்படவும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.