அமெரிக்காவின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவை எதிர்க்கும்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் தடுப்பூசி, டெல்டா வகை மாறுபாட்டுக்கு எதிராக 8 மாதங்கள் வரை செயல் திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவை எதிர்க்கும்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் தடுப்பூசி, டெல்டா வகை மாறுபாட்டுக்கு எதிராக 8 மாதங்கள் வரை செயல் திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்கவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனைகள் ஏதும் இன்றி அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவன ஒன்றை டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா வகை மற்றும் சார்ஸ் வகை தொற்று பாதிப்புக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசி வலுவான மற்றும் நீடித்த செயல்திறனை கொண்டிருப்பதாகவும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைந்தது 8 மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.