கியூபா-ரஷ்யா தொடரும் 120 ஆண்டுகளாக தொடரும் நட்பு!

கியூபா-ரஷ்யா தொடரும் 120 ஆண்டுகளாக தொடரும் நட்பு!

ரஷ்யாவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் 2022 இல் 120 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

சமீப காலங்களில் கியூபாஅனுபவித்த மிகவும் சிக்கலான தருணங்களில், அது எப்போதும் ரஷ்ய அரசின் ஆதரவையும் மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான துறைகளில் நமது நாட்டிற்கான முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அடிப்படைப் பங்கு வகிக்கிறது. எரிசக்தி, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கூறலாம் என ரஷ்யாவுக்கான கியூபாவின் தூதர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம், கியூபாவின் குடியரசுத் தலைவர் மிகுவல் டயஸ் கனெல் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலியுறுத்தினர். பொருளாதாரம், வணிகம், நிதி,  சர்வதேச உறவுகள், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை நினைவுகூர்ந்து, கியூபா தொடர்பான அமெரிக்க கொள்கையை நிராகரிக்கும் கருத்துக்களையும் இரு நாட்டுத் தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கியூபாவின் வளர்ச்சிக்கான திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒரு பங்குதாரராக  ரஷ்யா தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை கியூபாவின் தூதர் உறுதிபடுத்தியுள்ளார். கூட்டு நடவடிக்கைகள், முன்னேற்றத்திற்கான பரிமாற்றங்கள் ஆகியவை தொடரும் எனவும், கியூபாவின் பல்வேறு துறைகளில் 2030 வரை பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன என்று அவர் கூறினார்.