இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.! அமெரிக்கா எச்சரிக்கை.! 

இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.! அமெரிக்கா எச்சரிக்கை.! 

கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உலகமெங்கும் அதிகரித்துள்ளது. அதேபோல தற்போது கொரோனா தொற்று குறைந்துவந்த ஜப்பான்,இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாடுகளுக்கு பயணமா செல்லும் தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045-பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். அதே போல இலங்கையில் 2,971-பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இருநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் இந்த உருமாறிய கொரோனா தாக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் சூழலில் மீண்டும் அந்த நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.