40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் போர் விமானி வீர மரணம்!

40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் போர் விமானி வீர மரணம்!

40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர் என்று கூறப்படும் உக்ரைன் போர் விமானி ஸ்டீபன் தாராபால்கா, ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

போர் தொடங்கிய முதல் வாரத்தில் 6 ரஷ்ய விமானங்களை அவர் வீழ்த்தியதால் பாதுகாவலர் தேவதை என உக்ரைன் மக்களால் கொண்டாடப்பட்டார். பின்னர் அடுத்தடுத்த தாக்குதல்களால் கீவின் பேய் என்று குறிப்பிடப்பட்டார். ஆனால், அவரது முகம் மறைக்கப்பட்டே காட்டப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஸ்டீபன்தான் அந்த விமானி என்று உக்ரைன் விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் கதாநாயகனாக போற்றப்பட்ட போர் விமானி ஸ்டீபன் தாராபால்காவின் மறைவு உக்ரைன் மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.