ஆப்கானிஸ்தானில் எல்லை மீறும் அதிகாரம்....

ஆப்கானிஸ்தானில் எல்லை மீறும் அதிகாரம்....

ஆப்கானிஸ்தானில் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.  ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு செய்து வரும் அராஜகங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. 

குறிப்பாக, பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் அங்கு பல்வேறு உத்தரவுகளை தலிபான் அரசு பிறப்பித்து வருகிறது.  இந்நிலையில், அங்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு, கால்பந்து மைதானத்தில் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாலிபன்கள் தண்டனை வழங்கும் காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்....அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை...