ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை நேரில் நலம் விசாரித்த பிரதமரின் மனைவி...

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை, அந்நாட்டு பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்சே நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை நேரில் நலம் விசாரித்த பிரதமரின் மனைவி...

கடந்த அக்டோபர்  21ம் தேதி, திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இதில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண்குழந்தைகள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், குழந்தை பெற்று நைன்வெல்ஸ்  மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அப்பெண் மற்றும் அவரது கணவரை, பிரதமர் ராஜபக்சேயின் மனைவி ஷிரந்தி, நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது  குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுகளை வழங்கிய ஷிரந்தி, எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதி கூறியுள்ளார்.