வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...

வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...

சீனாவில் அதிவேகமாக சாலையில் சென்ற கார் மோதி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குவாங்டாங் மாகாணத்திலுள்ள குவாங்சோ பகுதியில் உள்ள சாலையில் ஏராளமான மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்தவாறு அதிவேகமாக சென்ற கார் பலர் மீது மோதியது. 

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  காரை ஹோட்டலுக்குள் ஓட்டிய இளைஞர்.....