உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு... அவர்களின் தோல்வியே காரணம்!

உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதற்கு ரஷ்ய படைகளின் தோல்வியே காரணம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு... அவர்களின் தோல்வியே காரணம்!

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. உக்ரைன் 2வது பெரிய நகரமான கார்கிவ்-ல் மிக பெரிய தாக்குதலை ரஷ்யா  நடத்தியுள்ளது. அங்குள்ள பாதுகாப்பு சேவை கட்டிடத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மக்கள் மீதும் ரஷ்ய படை தாக்குதலை நடத்தி வருகிறது.  

இந்நிலையில்  உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதற்கு ரஷ்ய படைகளின் தோல்வியே காரணம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் அனைத்து திசைகளில் இருந்தும் முன்னேற தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் உக்ரைன் ராணுவம் தகுந்த பதில் தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்ய படைகள் முன்னேற்றத்தில் தோல்வியை கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, மக்கள் வாழக்கூடிய இடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது என உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.