வெவ்வெறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்!!

வெவ்வெறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் அதிசய நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அரங்கேறியுள்ளது.

வெவ்வெறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்!!

பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரு சில வினாடிகள் மட்டுமே மாறுபடும். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வருடமே மாறிபோன நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், குழந்தைகள் பிறந்தது வெவ்வெறு வருடம் என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை டிசம்பர் மாதம் 31-ம் தேதி 2021 ஆண்டு இரவு 11.45 மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறந்துள்ளது. சராசரியாக 15 நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகளின் வருடமே மாறிப்போய் விட்டது.

அதனால் இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ‘இது எனது பணி காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் பாத்திமா, தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வெறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக அவர் கூறியுள்ளார்.