கீவ் நகரிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் - ரஷ்யா ராணுவம்

கீவ் நகரிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் - ரஷ்யா ராணுவம்

உக்ரைனின் கீவ் நகரிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என  ரஷ்யா ராணுவம் அறிவித்துள்ளது.

கீவ் நகரில் இருந்து உக்ரைன் மக்கள் உள்பட அனைவரும் வெளியேறலாம் என அறிவித்துள்ள ரஷ்யா ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் உறுதி கூறியுள்ளது.  

உக்ரைனில் 5 வது நாளாக இன்று போர் நீடித்து வருகிறது. முக்கிய நகரங்கள் ரஷ்யா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தாக்குதலுக்கு பயந்து மக்கள் அச்சத்தில் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது  குறிப்பிடதக்கது.