காபூலில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கர குண்டு வெடிப்பு...19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

காபூலில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கர குண்டு வெடிப்பு...19 பேர் பலி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதையடுத்து, தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய ராணுவ மருத்துவமனையான காபூல் சர்தார் முகமது தாவூத் கான் மருத்துவமனை வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத சூழலில், ஐஎஸ் அமைப்பு நடத்தியிருக்காலம் என சந்தேகிக்கப்படுகிறது.