இங்கிலாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 17 பேர் படுகாயம்

இங்கிலாந்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். லண்டன் வாட்டர்லூ ரெயில் நிலையத்தில் இருந்து சிலிஸ்பெரி நோக்கி வேகமாக புறப்பட்ட ரெயில், லண்டன் ரோடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுள்ளது.

இங்கிலாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்து..  17 பேர் படுகாயம்

இங்கிலாந்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். லண்டன் வாட்டர்லூ ரெயில் நிலையத்தில் இருந்து சிலிஸ்பெரி நோக்கி வேகமாக புறப்பட்ட ரெயில், லண்டன் ரோடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுள்ளது.

அப்போது, தண்டவாளத்தில் இருந்த மர்மப்பொருள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே சமயம், சுரங்கப்பாதையில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது இந்த ரெயில் மோதியது.

சிக்னல் பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் ரெயில் டிரைவர் உள்பட 17 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.