இந்தியாவிற்கு எதிரான கருத்து பதிவு - பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!
ஐநா, துருக்கி, ஈரான் மற்றும் எகிப்து நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் கணக்குகளை இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பேஸ்புக் கணக்கு மற்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 6 யூடியூப் சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியிருந்தது.
இந்த நிலையில் ஐநா, துருக்கி, ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள தேசிய பொது ஒளிபரப்பாளரான ரேடியோ பாகிஸ்தானின் ட்விட்டர் கணக்கையும் முடக்கியுள்ளது. பல போலி கணக்குகள் பாகிஸ்தானின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர் ட்விட்டர் கணக்குகளுக்கு பின்னாள் ஒளிந்துக் கொண்டு இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.