பிலிப்பைன்ஸில் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு..!

புயல் கரையை கடந்த போது மணிக்கு 195கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தகவல்..!

பிலிப்பைன்ஸில் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு..!

பிலிப்பைன்சை தாக்கிய புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது. பிலிப்பைன்சை தாக்கிய புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புயல் கரையை கடந்தபோது அதிகபட்சமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. சியார்கோ, சூரிகாவோ ஆகிய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.